மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை

Update: 2024-06-30 11:35 GMT

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் புங்கம்பாடி ரோட்டில் நங்காஞ்சி ஆற்றுப்பாலம் உள்ளது. அரவக்குறிச்சியில் இருந்து பாளையம் வழியாக திருச்சி செல்லும் பஸ்கள் மற்றும் வானங்கள் இந்த பாலத்தின் வழியாகத்தான் சென்று வருகிறது. திருச்சியில் இருந்து தோகைமலை, பாளையம் வழியாக கோயம்புத்தூர், கேரளா செல்லும் சிமெண்டு லாரிகள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் அரவக்குறிச்சி நங்காஞ்சி ஆற்றுப்பாலம் வழியாகத்தான் சென்று வருகிறது. மேற்குறிப்பிட்ட பாலத்தின் ஆரம்பத்திலும், கடைசியிலும் மட்டுமே ஒரு விளக்கு உள்ளது. பாலத்தின் இடைப்பகுதிகளில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக இந்த வழியாக நடந்து செல்பவர்கள் பெரும் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்