மின்கம்பம் அகற்றப்பட்டது

Update: 2024-06-23 08:40 GMT

சகாயநகர் ஊராட்சிக்கு உட்பட்ட அனந்த பத்மநாபபுரத்தில் ஆசிரியர் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு மின் கம்பம் பாதி உயரத்தில் முறிந்த நிலையில் காணப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்து வந்தது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்து காணப்பட்ட கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை அமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்