எரியாத தெருவிளக்குகள்

Update: 2024-06-09 11:43 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள குரும்பூண்டி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இரவு நேரத்தில் சாலையில் செல்லும் வகையில் சாலையோரத்தில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தெரு விளக்குகள் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் எரிவது இல்லை. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெரு விளக்கை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்