தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2024-06-02 11:51 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே பலவரசன் ஊராட்சி, கிடங்கி வயல் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இப்பகுதியில் செல்லும் மின் கம்பியானது தாழ்வாக செல்வதினால் இந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்