மின்விளக்கு வசதி தேவை

Update: 2024-05-26 08:55 GMT

மயிலாடி கூண்டு பாலம் புதிதாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், மாற்றுப்பாதை வழியாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் சென்று வருகின்றனர். தற்போது பெய்து வரும் கனமழை காாரணமாக மாற்றுப்பாதை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும், சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் தெருவிளக்கு பொருத்தப்படவில்லை. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாவதுடன், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி மாற்றுப்பதையில் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகளை பொருத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தர்மராஜன், அனந்த பத்மநாபபுரம்.

மேலும் செய்திகள்