ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-05-12 14:07 GMT

கோவை சாய்பாபா காலனி கே.கே.புதூர் 45 வீதியில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது. அதனால் பொதுமக்கள் அந்த சாலை வழியாக நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிதாக மின்கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்