தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் அச்சம்

Update: 2024-05-05 18:12 GMT
கடலூர் அருகே குறவன்பாளையம் கிராமத்தில் இருந்து அங்குள்ள விளைநிலங்களுக்கு செல்லும் சாலையின் குறுக்கே மிகவும் தாழ்வாக மின்கம்பிகள் செல்கிறது. இதையடுத்து மின்விபத்து ஏற்படாமல் இருக்க சவுக்கு கம்புகளை கொண்டு முட்டு கொடுத்து மின்கம்பிகளை உயர்த்தியுள்ளனர். இந்த கட்டைகள் எந்தநேரத்திலும் உடைந்து விழும் நிலையில் இருப்பதால் அங்கு மின்விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்