மின்தடையால் அவதி

Update: 2024-04-28 15:14 GMT

சாணார்பட்டி அருகே கொசவப்பட்டி மேல்தோட்டம் பகுதியில் விவசாய தோட்டங்களுக்கு முறையாக மின்சாரம் வழங்கப்படுவதில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பயிர்களுக்கு மின்மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் வீடுகளிலும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் கோடை காலத்தில் வாட்டி வதைக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சீராக மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்