மின்விளக்கிற்கு சுவிட்ச் பொருத்தப்படுமா?

Update: 2024-04-28 13:41 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தையூர் கிராமத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட தெருவிளக்குகளில் சுவிட்ச் இல்லாமல் உள்ளது. இதனால், தெருவிளக்குகள் நாள் முழுவதும் எரிவதால், மின்சாரம் அதிகமாக வீணாகிறது. மேலும், தொடர்ந்து எரிவதால் மின் விளக்குகள் சீக்கிரம் பழுதாகும் நிலையும் உள்ளது. எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்