குறைந்த மின் அழுத்தத்தால் அவதி

Update: 2024-04-21 16:21 GMT
சங்கராபுரம் ஒன்றியம் விரியூர் கிராமத்தில் குறைந்த மின் அழுத்தத்துடன் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அங்குள்ள வீடுகளில் மின்சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே சீரான முறையில் மின்வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்