மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை

Update: 2024-04-21 11:15 GMT
கரூர் மாவட்டம் நடையனூர் அரசு உதவி பெறும் பள்ளிக்கு பின்னால் உள்ள மின்கம்பம் ஒன்று உள்ளது. அந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லவே பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்