எரியாத தெருவிளக்கு

Update: 2024-04-21 09:12 GMT

தர்மபுரம் ஊராட்சிக்குட்பட்ட மங்காவிளை சந்திப்பில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் கடந்த ஒரு மாதமாக மின்விளக்கு எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் இரவு நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே பழுதடைந்த மின்விளக்கை மாற்றி புதிய விளக்கு பொருத்தி எரிய வைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்