நடவடிக்கை தேவை

Update: 2024-04-21 09:07 GMT

நாகர்கோவில் கைலாஷ் கார்டன் 2-வது தெருவில் உள்ள 3-வது குறுக்குத்தெருவின் சாலையோரத்தில் 182 எண் கொண்ட ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள இணைப்பு ஒயர் துண்டிக்கப்பட்டுள்ளதால் அதில் உள்ள தெருவிளக்கு எரியாமல் காணப்படுகிறது. மேலும், துண்டிக்கப்பட்டு கீழே தொங்கிக்கொண்டிருக்கும் ஒயரில் இருந்து மின்சாரம் பாய்ந்த வண்ணம் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே துண்டிக்கப்பட்டுள்ள ஒயரை மீண்டும் இணைத்து தெருவிளக்கை எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்