ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-04-07 08:16 GMT

தூத்தூர் பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இதன் அருகில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதில் மின்விளக்கும் அமைக்கப்படாமல் உள்ளது. எனவே, பாதசாரிகள் நலன்கருதி சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பத்தை நட்டு அதில் மின்விளக்கு அமைத்து எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்