மின்கம்பம் மாற்றியமைக்கப்பட்டது

Update: 2024-03-31 07:19 GMT

மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் வலியகுளத்தில் இருந்து உண்ணாமலைக்கடைக்கு ஒரு காங்கிரீட் சாலை செல்கிறது. இங்கு ஆயிரம்தெங்கு பகுதியில் ஒரு மின்கம்பம் சாலையின் நடுவே நின்றது. இதனால், அந்த பகுதியில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதுபற்றி ‘தினந்தந்தி’ புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற மின்கம்பத்தை அகற்றி சாலையோரத்தில் அமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்