எரியாத உயர் கோபுர மின் விளக்கு

Update: 2024-03-17 13:14 GMT

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா வேலாயுதம்பாளையம், தரகம்பட்டி, குளித்தலை செல்லும் சாலையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் வசதிக்காக உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர் கோபுர மின் விளக்கானது கடந்த ஓராண்டாக எரியாமல் பழுதடைந்து உள்ளது. இதனால் இந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் பெரிதும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உயர் கோபுர மின் விளக்கை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்