மின்விளக்குகள் சீரமைக்கப்படுமா?

Update: 2024-03-10 17:47 GMT

தர்மபுரி-பாப்பாரப்பட்டி சாலையில் கடகத்தூர் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள் கடந்த பல மாதங்களாக எரியவில்லை. இதனால் இந்த மேம்பாலம் இரவு நேரத்தில் இருளில் மூழ்கி காணப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த மேம்பாலத்தில் விபத்து அபாயத்தை தடுக்க அனைத்து மின்விளக்குகளை சீர் செய்து தர சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்