எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2024-03-10 17:12 GMT

சாணார்பட்டி ஊராட்சி கோணப்பட்டி தெற்கு தெருவில் கடந்த சில மாதங்களாக உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் இருக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனர். எனவே உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்