இடையூறான மின்கம்பம்

Update: 2024-03-03 07:55 GMT

அருமனை பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு பகுதியில் சி.எஸ்.ஐ. ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் எதிரே அறப்புரையன்விளைக்கு செல்லும் சாலையின் நடுவே ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு இடையூறாக காணப்படுகிறது. எனவே, பாதசாரிகள் நலன்கருதி சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் மின்கம்பத்தை அகற்றி ஓரமாக நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதீஷ்குமார், கும்பகோடு.

மேலும் செய்திகள்