மீட்டர் பெட்டியால் விபத்து

Update: 2024-03-03 07:40 GMT

அகஸ்தீஸ்வரம் தாலுகாக்கு உட்பட்ட மகாதாரனபுரத்தில் இருந்து பஞ்சலிங்கபுரம் செல்லும் சாலையில் ஒரு கேட்டரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி அருகில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் மீட்டர் பெட்டி மிகவும் தாழ்வாகவும் திறந்த நிலையிலும் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் குழந்தைகள் மின் இணைப்பை தொடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, மீட்டர் பெட்டிகளை சற்று உயரமான இடத்தில் அமைத்து விபத்தை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்