விபத்து அபாயம்

Update: 2024-02-25 07:48 GMT

நாகர்கோவில் மேலஆசாரிபள்ளத்தில் வி.எஸ்.தெரு உள்ளது. இந்த தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கின் சுவிட்சு பெட்டி பொருத்தப்பட்டுள்ளது. அந்த சுவிட்சு பெட்டி சேதமடைந்து திறந்த நிலையில் காணப்படுகிறது. சிறுபிள்ளைகள் நடமாடும் பகுதி என்பதால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சிறுபிள்ளைகள் நலன்கருதி சேதமடைந்த சுவிட்சு பெட்டியை அகற்றி விட்டு புதிய பெட்டியை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பெலிக்ஸ் பிரபு, மேலஆசாரிபள்ளம்.

மேலும் செய்திகள்