பழுதடைந்த மின்விளக்குகள்

Update: 2024-02-18 17:11 GMT
சீரமைப்பு பணிக்காக திண்டிவனம் மேம்பாலத்தில் இருந்து நேருவீதி செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நகரில் இருந்து சலவாதி சாலை வழியாக சென்னை, புதுச்சேரி, திருச்சி செல்லும் வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்துள்ளதால், இரவு நேரத்தில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் குற்றசம்பவங்கள் நடைபெறும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்