பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கு

Update: 2024-02-18 17:01 GMT
ராமநத்தம் அருகே கீழ்க்கல்பூண்டி பஸ் நிறுத்தத்தில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு பழுதடைந்து கடந்த பல ஆண்டுகளாக எரியாமல் காட்சி பொருளாக இருந்து வருகிறது. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பழுதடைந்த உயர் கோபுர மின்விளக்கை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்