எரியாத மின்விளக்குகள்

Update: 2024-02-04 14:04 GMT

அரியலூர் அண்ணா சிலை ரவுண்டானா அருகில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகரித்தே காணப்படுகிறது. இந்நிலையில் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்குகளில் உள்ள 6 பல்புகளில் 1 மட்டுமே எரிகிறது. இதனால் போதுமான வெளிச்சமின்றி இருட்டாக காணப்படுகிறது. நகரின் முக்கிய பகுதியாக விளங்கும் ரவுண்டானா பகுதியில் உள்ள மின்விளக்குகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்