உயர்கோபுர மின் விளக்கு வேண்டும்

Update: 2024-02-04 14:01 GMT

அரியலூரில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்திற்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பல்வேறு பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இரவு நேரங்களில் பஸ் நிலையத்தினுள் எரியும் மின்விளக்குகள் போதுமானதாக இல்லை. வெளிச்சம் மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வந்தால், அவை பயணிகளின் கண்களுக்கு தெரிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்காலிக பஸ் நிலையத்திற்குள் உயர்கோபுர மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்