தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2024-02-04 13:24 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள பெரிய நாயகிபுரம் கிராமத்தில் திருக்கட்டளை செல்லும் சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு அதற்கு பதில் புதிய மின்கம்பத்தை நட்டு வைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்