உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2024-01-28 12:50 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே கைக்குறிச்சி, திருக்கட்டளை, திருமலை ராயசமுத்திரம் ஆகிய 3 ஊராட்சிகளை இணைக்கும் புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி இணைப்பு சாலையான கேப்பரை என்னுமிடத்தில் இரவு நேரத்தில் போதிய அளவில் வெளிச்சம் இல்லாததால் இப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்