உயர் மின்கோபுரம் அமைக்க கோரிக்கை

Update: 2024-01-21 11:53 GMT

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கேப்பரை ஊராட்சி பகுதியில் புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி இணைப்பு 3 சந்திப்பு சாலை அமைந்துள்ளது இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள், பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு மின்விளக்கு இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் இப்ப பகுதியில் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 3 சந்தி்ப்பு சாலையில் உயர் மின் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்