ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-01-14 14:12 GMT

கரூர் மாவட்டம் நடையனூர்-பேச்சிப்பாறை மின் மயானத்திற்கு செல்லும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு அருகில் புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பழைய மின்கம்பத்தில் இருந்து புதிய மின் கம்பத்திற்கு இணைப்புகள் மாற்றப்படாமல் உள்ளது.  எனவே இந்த மின்கம்பம் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்