கூடுதல் மின்மாற்றி அமைக்கப்படுமா?

Update: 2024-01-07 12:58 GMT

புதுக்கோட்டை மாவட்டம், 9A நத்தம் பண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட ஐ.டி.ஐ. காலனியில் ஒரே ஒரு மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்மாற்றி உதவியுடன், இப்பகுதியில் உள்ள வங்கி, தொழிலாளர் நலத்துறை அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் பல்வேறு தொழில் செய்யக்கூடிய வணிக வளாகங்களும், சிறிய அளவிலான தொழிற்சாலைகளும் மற்றும் பொதுமக்கள் வசிக்கக்கூடிய வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாலும், அனைத்து நேரங்களிலும், தொடர்ந்து குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு வருகிறது. இதனால் மின் சாதனங்கள் பழுதடையும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்