பழுதடைந்த மின்விளக்கு

Update: 2023-12-31 08:54 GMT

நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் புத்தேரி மேம்பாலம் உள்ளது. இது முக்கிய சாலை என்பதால் எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள சில மின்விளக்குகள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே பழுதடைந்த மின்விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகளை அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்