மின் கம்பிகளை அகற்ற பெற்றோர் கோரிக்கை

Update: 2023-12-24 15:12 GMT
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் காரையூர் அருகே உள்ள சூரப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏராளமானோர் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் பள்ளி கட்டிடம் மேலே மின்கம்பி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பள்ளியில் உணவு தயாரிக்கப்படும் கட்டிடத்திற்கு மேலேயும் மின்கம்பி செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளி கட்டிடத்தின் மேலே செல்லும் மின் கம்பிகளை அகற்றிவிட்டு மாற்று வழியில் மின் கம்பிகளை அமைக்க வேண்டுமென மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்