புதிய மின்கம்பத்திற்கு இணைப்பு கொடுக்கப்படுமா?

Update: 2023-12-24 14:29 GMT
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள பாப்பான்குளம் கருத்தப்பவயல் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீசிய கஜா புயலில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்தது. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அதன் அருகே புதிய மின்கம்பம் நடப்பட்டது. ஆனால் இதுவரை புதிய மின்கம்பத்திற்கு எந்த மின் இணைப்பு கொடுக்காமல் அப்படியே காட்சி பொருயாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் பழை மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பத்திற்கு மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்