மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை

Update: 2023-12-17 16:26 GMT
கிருஷ்ணகிரியில் ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளியை அடுத்து மேலுமலை கணவாய் சாலை உள்ளது. இந்த சாலையில் சில கிலோ மீட்டர் தொலைவிற்கு மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த சாலையே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இப்பகுதிகளில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்