செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர், வி.வி. நகர் ரெயில்வே தெருவில் உள்ள மின்கம்பத்தில் செடி, கொடிகள் அடர்ந்து புதர்போல் காணப்படுகிறது. அப்பகுதியில் அதிக அளவு மக்கள் நடமாடும் பகுதி என்பதால் மழைகாலங்களில் மின் விபத்து ஏற்பட வாய்புள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி மின்வாரிய துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.