நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2023-12-03 16:49 GMT

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஊத்துகாலனி மற்றும் எம்.ஜி.ஆர். காலனி ஆகிய பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். வீடுகளில் அத்தியாவசிய மின்சார பொருட்களை பயன்படுத்த முடியாத நிலையில் தவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை  அதிகாரிகள் புதிய மின்மாற்றி அமைத்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்