எரியாத தெரு மின்விளக்குகள்

Update: 2023-12-03 13:02 GMT

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்குத் தாம்பரம் கேம்ப் ரோடு சந்திப்பு துவங்கி சுமார் 2 கி.மீ தொலைவுக்கு சாலையில் உள்ள தெருவிளக்குகள் எரியவில்லை. மேலும், மின் விளக்குகள் குறைவான எண்ணிக்கையில் காணப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் வெளிச்சம் குறைவால் சாலையில் செல்ல மக்கள் அச்சம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்