விபத்து அபாயம்

Update: 2023-11-26 15:55 GMT

விருதுநகர் மாவட்ட மைய நூலகம் மற்றும் மின்சார வாரிய அலுவலகத்திற்கு இடையே செல்லும் பிரதான சாலையின் நடுவே 2 மின்கம்பங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலை எப்போதும் வாகனங்களின் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். இதனால் இந்த சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்