ஆபத்தான மின்மாற்றி

Update: 2023-11-26 14:16 GMT

கரூர் மாவட்டம், புலியூர் அக்ரஹாரம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சீரான மின்சாரம் வினியோகம் செய்யும் வகையில், இப்பகுதியில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றி சாய்ந்த நிலையில் மிகவும் ஆபத்தாக காணப்படுகிறது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக இந்த மின்மாற்றி பொதுமக்கள் நடமாட்டத்தின்போது கீழே விழுந்தால் பெருமளவில் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்