மின் விளக்கு வசதி வேண்டும்

Update: 2023-11-19 14:28 GMT

கரூர் மாவட்டம் புலியூரிலிருந்து வெள்ளாளப்பட்டி வழியாக சீத்தப்பட்டிக்கு செல்லும் சாலையில் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை குறுக்கிடுகிறது. அந்த இடத்தில் மேம்பாலம் கட்டப்பட்டு தேசிய நெடுஞ்சாலை மேலேயும், புலியூர் சீத்தப்பட்டி சாலை அடியிலும் செல்கிறது. இந்த நிலையில் மேம்பாலத்தின் கீழே மின் விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் புலியூர் சீத்தப்பட்டி சாலையில் பயணிக்கும் பொதுமக்களுக்கு சமூக விரோதிகளால் ஆபத்து ஏற்படக்கூடிய நிலை உள்ளது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மேம்பாலத்தின் அடியில் இரண்டு பகுதியிலும் மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

மேலும் செய்திகள்