மின்மாற்றியால் விவசாயிகள் அவதி

Update: 2023-11-19 14:21 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட கதிராமங்கலம் ஊராட்சியில் உள்ள சடையமங்கலம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றி சரிவர இயங்காததால் இப்பகுதி விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்