உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்

Update: 2023-11-19 13:43 GMT

புதுக்கோட்டை மாவட்டம், 9ஏ நத்தம் பண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட ஐ.டி.ஐ. காலனி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஊரின் நடுவீதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதலமடைந்து எப்போது வேண்டுமானாலும் முடிந்துவிழும் நிலையில் ஆபத்தாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்