எலும்பு கூடான மின்கம்பம்

Update: 2023-11-05 14:52 GMT

கரூர் மாவட்டம் நடையனூர் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பம் நடப்பட்டு அந்த சுற்று வட்டார பகுதியில் உள்ள வீடுகளுக்கும், விவசாய மின்மோட்டோர்களுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மின்கம்பம் சிதிலமடைந்து எலும்புகூடுபோல் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்