பயனற்ற உயர்கோபுர மின்விளக்கு

Update: 2023-11-05 12:00 GMT

ஆதனக்கோட்டை மடத்துக்கடை பஸ் நிறுத்தம் அருகே உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்விளக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக எரியாமல் உள்ளது. மடத்துக்கடை சாலை வளைவாகவும், பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பிரிவு சாலையாகவும் உள்ளது. மடத்துக்கடை பிரதான சாலையில் பஸ் நிறுத்தம், ஆட்டோ நிறுத்தம், மளிகைக்கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல் என பல்வேறு கடைகள் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்