மின்கம்பத்தில் படர்ந்த செடிகள்

Update: 2023-11-05 07:36 GMT

சுருளகோடு முதல் சித்திரங்கோட்டுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கல்குவாரிளும், தனியார் ரப்பர் தோட்டங்களும் உள்ளன. இந்த சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் செடி,கொடிகள் படர்ந்து கம்பமே தெரியாத அளவிற்கு காணப்படுகிறது. இதனால் மின்கசிவு ஏற்பட்டு மின் இழப்பு ஏற்படுவதுடன், அணில், பாம்பு உள்ளிட்ட பிராணிகள் கம்பங்களில் சிக்கி மின்தடை ஏற்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் கம்பங்களில் படர்ந்துள்ள ெசடி,கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்