சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-10-29 15:09 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர், கருணாநிதி சோழன் நகர், வீரமணி தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பங்கள் அதன் உறுதித்தன்மையை இழந்துள்ளதால் எந்த நேரத்திலும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் நிகழும் முன் சேதமடைந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக மின்கம்பம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்