பழுதடைந்த மின்கம்பம்

Update: 2023-10-29 11:56 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி தோப்புத்துறை காசித்தெரு சாலையோரத்தில் பழுதடைந்த மின்கம்பம் ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக கிடக்கிறது. இதனால் சாலையோரத்தில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துடன் நடந்து செல்லும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் சில நேரங்களில் இடையூறாக கிடக்கும் மின்கம்பத்தினால் நிலைதடுமாறி கீழே விழுந்துவிடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மேற்கண்ட பகுதியில் சாலையோரத்தில் கிடக்கும் மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்