மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை

Update: 2023-10-22 15:44 GMT

தர்மபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சாலையில் மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி பகுதிகளில் பாலங்கள் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே விபத்துகளை தடுக்க இந்த மேம்பாலங்களில் சாலையின் மையப்பகுதிகளில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்