சிதிலமடைந்த மின்கம்பம்

Update: 2023-10-15 12:14 GMT

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள புங்கோடை பகுதியில் மின்கம்பம் அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் மின்கம்பம் அமைக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்