திறந்து கிடக்கும் மின் பெட்டி

Update: 2023-10-15 10:18 GMT

கிணத்துக்கடவு அண்ணா நகரில் கூட்டுறவு வங்கி முன்பு மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த கம்பத்தில் உள்ள மின்பெட்டி திறந்து கிடக்கிறது. அதுவும் குறைந்த உயரத்தில் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் அருகில் குழந்தைகள் விளையாடி வருகின்றனர். அவர்கள் தொடும் வகையில் மின் பெட்டி உள்ளது. இதனால் குழந்தைகள் மின் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த மின்பெட்டியை மூடுவதோடு உயர்த்தி பொருத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்